உன்னதமான உணர்வில்
சுமந்த மைந்தனுக்காக
துயில மறந்து...
எண்ணிலடங்கா கவி எழுதி...
அன்பாய் அணைத்து
ஆத்ம நிம்மதி
அடைந்த நான்...
என் உயிரின் உயிர்
சிசுவின் சிசு ஜனித்து...
கரம் ஏந்திய நொடி
உலகளாவிய
இன்பம் தர...
இமைகள் இளைப்பாறாமலே
இளந்தளிரை ரசித்திருக்க...
கருவிழி அசைந்தாடாது
கண்ணோடு கண் பார்க்க
கற்ற மொழியும் மறக்க...
ஐந்து மாத
பாலன் செய்யும்
ஜாலம் கண்டு ...
உற்சாகம் கரைபுரள
எச்சில் வழியும் உதடுகளின்
கள்ளமில்லா இளஞ்சிரிப்பு
காதோரம் கவி பாட...
கண் மூடினாலும்
காட்சிகள் அசைந்தாட ..
நேசித்த வாசம்
நெஞ்சுக்குள் பரவி...
மதியை மயக்குதே
பேரன்பின் பேரனாலே...!
- கௌசல்யா ஞானேஸ்வரன்

No comments:
Post a Comment