"அலோ யாரு? சக்கரகத்தி சந்திரனா பேசறது "?
Monday, September 4, 2023
கல்யாணச் சீர் - யசோதா பழனிச்சாமி
என்னை பைத்தியம் என்கிறாய் - கே. ஜெயலலிதா
காரணங்களும் இல்லை.
காரியங்களும் இல்லை.
எதிர்ப்பும் இல்லை.
எதிர்பார்ப்பும் இல்லை..
என்றெல்லாம்
ஏதேதோ சொல்லிக் கொள்கிறேன்.
ஆனாலும் எந்நேரமும் ஒரு உரையாடல்
மனதிற்குள் உன்னுடனே
நடந்து கொண்டியிருக்கிறது.
வலியென்றால் வந்து
உன் கரம் பற்றி இறுக்கிக் கொள்கிறேன்.
விழி துளிர்க்கும் போதெல்லாம்
உன் மடி தேடிக் கொள்கிறேன்.
தேவையெனில் – உன்
கால் கட்டி இறைஞ்சுகிறேன்.
சில நேரம் கெஞ்சுகிறேன்.
சில நேரம் கொஞ்சுகிறேன்.
சில நேரம் பொங்குகிறேன்.
சில நேரம் உளறுகிறேன்.
முடியாத கட்டங்களில்
உன் நெஞ்சோடு இறுக்கி
உறங்க வைக்கவும் ஆணையிடுகிறேன்.
குறுக்கீடில்லாமல்
கொட்ட அனுமதிக்கும்
உன்னை நான் கடவுள் என்கிறேன்நீயோ என்னை பைத்தியம் என்கிறாய்...!?
இது தான் காதல் என்பதா? ’ - விஜிரவி
அந்த உணவகத்தின் வாயிலில் மிகுந்த ஆவலோடு காத்திருந்தான் தீரஜ். அவனைத் தேடி மனிஷா வரப்போகிறாள் என்ற நினைப்பே தித்தித்தது. இன்று அவளுடன் செல்ஃபி எடுத்து, தன் நண்பர்கள் குழுவிற்கு அனுப்ப வேண்டும். மதியம் அவளுடன் மகாராஜா மல்டிபிளக்ஸில் நூன் ஷோ பார்க்க ஏற்கனவே டிக்கெட் ரிசர்வ் செய்தாயிற்று.
நன்றி - ஸ்ரீ மைத்தி
நம் அனைவருமே நமது உடல் மற்றும் மன நலம் பேணிட பல வழிமுறைகளை மேற்கொள்கிறோம். உடல் நலம் மன நலத்தை காக்கின்றதா இல்லை மனநலம் உடல் நலத்தை மேம்படுத்துகிறதா என்பதற்கான பதில் சற்றே சவாலானதே. காற்று வந்ததும் கொடி அசைந்ததா, கொடி அசைந்ததும் காற்று வந்ததா என்ற சந்தேகமே இன்னும் தீர்ந்தபாடில்லையே.
இதில் மனநலத்தை மேம்படுத்திட பல நுட்பங்களை கையாள்கிறோம். மனதின் கட்டுப்பாட்டில் நாம் பிடி படுவதை விட, மனதினை நாம் நம் பிடியில் பிடித்து வைக்கும் போது எண்ணியதை கைப் பற்றிட முடிகிறது.
அவ்வாறான நுட்பங்களில் ஒன்று தினமும் positive affirmations “நான் நன்றாக இருக்கிறேன்”, “நான் நினைத்தது நிறைவேறுகிறது” ‘என் பணியை நான் சிறந்த முறையில் செய்து முடிக்கிறேன்” என பாசிட்டிவான வாக்கியங்களை சொல்ல சொல்ல நமக்கு நேர்மறையான விஷயங்கள் நடக்கும் என்ற psychological factors ஐ பலரும் கடைப்பிடிக்கிறோம்.
இதேபோல் உங்கள் வாழ்வில் நல்லவற்றை எண்ணிப்பாருங்கள், அவ்வாறான நல்லவைகள் பல்கிப் பெருகும் என்பதுவே Count your blessings என்பதின் சாராம்சம். நல்லனவற்றை எண்ணிப் பார்ப்பது நமது சுய புலம்பல்களை தவிர்க்கும். “என்னிடம் இது இல்லையே”, “எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?”, “நான் மட்டும் ஏன் இவ்வாறு கஷ்டப்பட வேண்டும்”, “நான் யாருக்கும் தீங்கு செய்யவில்லையே” போன்ற சொற்றொடர்கள் இன்றைய அன்றாட வாழ்வில் பலருடைய ரீங்காரமாக இருக்கின்றது. இதை தவிர்க்க நாம் நேர்மறை வாக்கியங்களுடன் அவற்றை திரும்பத் திரும்ப எண்ணி நன்றி உணர்வினை வெளிப்படுத்திக் கொண்டே இருத்தல் பயனளிக்கின்றது.
இவ்வரிசையில் Sense of Gratitude என்பது புதுவரவு. நன்றியுணர்வு.இந்த நன்றியுணர்வு நிலையில் எதிர்மறை சிந்தனைகள் மட்டுப்படுத்தப்பட்டு, நாம் வாழ்வில் முன்னேற்றமடைய வேண்டிய விஷயங்கள் மேல் அக்கறை செலுத்த ஆரம்பிக்கின்றோம்.“இன்று காலை நான் ஆரோக்கியமாக இருப்பதற்கு நன்றி. “ “எனக்கு கிடைத்த சத்தான உணவிற்கு நன்றி. “ “இன்று நான் பத்திரமாக அலுவலகம் வந்தடைந்ததற்கு நன்றி. “ இவையே கிடைத்ததற்கு நம் நன்றியுணர்வினை வெளிப்படுத்தப் பயன்படுத்தும் மாதிரி வாக்கியங்கள்.
இந்த இடத்தில் சற்றே மாறுபட்டு சிந்திப்போமா? ‘நான்’ என்று சொல்லும் போது ஒட்டாத உதடுகளை ‘நாம்’ என்று சொல்லி இணைப்போமா?நன்றியுணர்வினை ‘நான்’ என்பதை முன்னிலைப்படுத்தி மட்டுமே செய்யாமல், இந்த வட்டத்திற்குள் நம்முடன் சார்ந்தவர்களையும் இணைத்துக் கொள்ளும் போது, வாழ்வில் நமக்கான நேர்மறையான எண்ணங்கள், நல்ல விஷயங்கள் யாவுமே மேலும் பெருகுவதை காண முடிகின்றது.
நன்றியை நமக்கு நாமே உரைப்பதோடு அல்லாமல், அந்த நன்றி உணர்வினை நமது அன்றாட வாழ்வில் உடன் பயணிக்கும் ஒவ்வொருவரிடமும் வாய்விட்டு பகிர்ந்து அளிக்கும் போது, மேலும் நல்லுணர்வுகள் மேலோங்குவதை காண முடிகிறது.அந்தப் பரவசத்தை நாம் உணர்ந்தால் மட்டுமே அது தரும் சுகத்தை அனுபவிக்க முடியும். எடுத்துக்காட்டாக நாம் வேலை செய்யும் அலுவலகங்களில் நமக்கு முன்னர் வந்து கதவை திறந்து வைப்பவர் அலுவலகத்தின் உதவியாளர். அது அவரது வேலை தான். அதற்காகத்தான் அவருக்கு சம்பளமும் தரப்படுகிறது. ஆனால் நாம் அவருக்கு நன்றி சொல்லி நகரும்போது அவருக்கு அது அன்றைய நாளின் உத்வேகமாக அமைவதோடு, தான் ஏதோ சாதித்து விட்டது போன்ற உணர்வினையும் தருகிறது. இதைத் தொடர்ந்து செய்யும்போது நம் மீதான மதிப்பும் அவர்களது மனதில் உயர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல் தான் வீட்டிற்கு காய்கறி, பழ வகைகளை வியாபாரம் செய்ய வருபவர்களிடமும்,வாங்கும் பொருளுக்கு தகுந்த பணத்தைக் கொடுத்துவிட்டு கூடவே நன்றியையும் உரைக்கும் போது, அடுத்த முறை அக்கறையுடன் நமக்கானதைப் பார்த்து வாங்கி வந்ததாக அவர்கள் உரைப்பதைக் கேட்க முடியும். எத்தனை முறை நாம் பயணம் செய்யும் பேருந்து ஓட்டுனரிடம் நன்றி சொல்கிறோம்? ஒருமுறை சொல்லித்தான் பார்ப்போமே. அவர் தனது புன்னகையின் மூலம் நம்மை மனதால் வாழ்த்தி, நமக்கான நேர்மறை எண்ணங்களைத் தருகிறார் என்பதை அனுபவிப்போமா?
ஒருமுறை ரயிலில் பயணித்த போது புகை வண்டியை இயக்கியவரைப் பார்த்து நன்றி சொல்லியே ஆக வேண்டும் என்று எனது மனது விரும்ப, தேடிச் சென்று நன்றி உரைத்த போது, அவர் கண்களில் நீர் தழும்ப மிகவும் நெகிழ்ச்சியாக உணர்வதாகவும், தேடி வந்து நன்றியுரைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி எனவும் வாழ்த்தியது இன்றளவும் மனதில் பசுமையாய் இருக்கிறது.
வயதில் மூத்தோர் - இளையோர், அதிகாரத்தில் மூத்தவர் - இளையவர், படிப்பறிவு உடையவர் - இல்லாதவர், என எந்தப் பாகுபாடும் இன்றி இயங்கக்கூடிய ஒரு தளம் இந்த நன்றி உணர்வினை வெளிப்படுத்தி , நாம் பிறருடன் இணைந்து பயணிக்கும் தளம் மட்டுமே.
நாம் அனைவரும் இத்தளத்தில் பயணித்து நமக்கான மனநலத்தினை மேம்படுத்திக் கொள்வோமா?நன்றியுணர்வு கொடுக்க கொடுக்க ஊறும் கேணி. நமக்கான நல்லுணர்வை கொடுத்துக் கொண்டே இருக்கும் அமுதசுரபி.
நன்றியுணர்வினைப் பற்றி பகிர்ந்தளித்த என் எண்ணங்களை ஆவலுடன் படித்த நல் உள்ளங்களுக்கு எனது நன்றிகள்.
வங்காளக் கரையோரம் - மூர்த்தி
உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரை எவ்வளவு தொலைவு இருக்கும் என நீங்கள் எப்போதாவது யோசித்தது உண்டா? கடற்கரையை முழுவதும் கடந்தது உண்டா? அல்லது கடந்து பார்க்க வேண்டுமென்ற ஆவல் தோன்றியதுண்டா?
எனக்கு ஒவ்வொரு முறை மெரினா செல்லும்போதெல்லாம் இடது புறம் என்ன இருக்கும்? வலதுபுறம் எவ்வளவு தொலைவு செல்லும் என்று அறிந்துகொள்ளும் ஆர்வம் ஒரு ஓரமாக எட்டி பார்க்கும். ஆனால் கால சூழல் அதற்கு ஒத்து வராமல் போகும்.
கடந்த ஜூலை மாதத்தில் உள்ளத்தனைய உடல் குழுமம் நடத்திய 21 நாட்கள் உடற்பயிற்சி சவாலில் இணைந்திருந்தேன். கூடவே பக்கத்து வீட்டு தம்பி சதீஷையும் கோர்த்து விட்டிருந்தேன். 21 நாட்கள் சவாலின் 15 மற்றும் 16'வது நாட்களின் எங்களுடைய காலைப்பொழுது சென்னையில் உதயமானது. ஜூலை 22 அன்று காலை 4.30 மணிக்கு ஏற்காடு எக்ஸ்பிரஸிலிருந்து இறங்கி லோக்கல் ட்ரெயின் மூலமாக சேப்பாக்கத்தை அடைந்தோம். அங்கிருந்து நடை ஆரம்பமானது.
அரை மணி நேர நடைக்கு பிறகு மெரினா கடற்கரையின் இடது புறத்தை அடைந்தோம். கூவம் நதி கடலில் சேரும் பகுதியில் பாறைகள் அடுக்கப்பட்ட இடத்தில் ஸ்ட்ராவா செயலியை ஆன் செய்து உடற்பயிற்சி சவாலின் 15'வது நாளை ஆரம்பித்தோம். ஆரம்பித்த இடத்திலிருந்து சிறிது தொலைவு வரை நண்டுகள் நடமாடும் பகுதியாக இருந்தது. நடமாடும் பகுதி என்பதை விட நண்டுகள் வசிப்பிட பகுதி எனலாம். சிறிய நண்டுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக குறுக்கும் மறுக்காக ஓடிக்கொண்டிருந்தன. நண்டுகளின் பிள்ளைகள் சற்று வளர்ந்ததும் தனி குடித்தனம் சென்று விடுகின்றன போல. சிறு நண்டுகள் சிறு வலைகளிலும் பெரிய நண்டுகள் பெரிய வலைகளிலும் இருந்தன. சிறு நண்டுகள் வலையிலிருந்து சற்று தள்ளி நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்தன. மனிதர்களை பார்த்தால் குடுகுடுவென வலைக்குள் வந்து புகுந்துகொண்டன. வலைக்குள் இருந்துகொண்டு தலையை மட்டும் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த பெரிய நண்டுகள் நம்மை பார்த்ததும் உள்ளே சென்று ஒளிந்துகொண்டன. இவற்றையெல்லாம் பார்க்கும் போது நண்டுகள் பற்றி தேடி தெரிந்துகொள்ளும் ஆவல் ஏற்படுகிறது.
அப்படியே மக்கள் நடமாடும் பகுதிக்கு வந்தோம். சிறிதளவு கூட்டம் இருந்தது. ட்ராக்டர் ஒன்று மணலை சுத்தம் செய்துகொண்டிருந்தது. செப்பல்களை கையில் எடுத்துக்கொண்டு நடந்தாலும் மணலில் நடக்க சிரமமாக இருந்ததால் கடல் அலைகள் வந்து போகும் பகுதியில் நடந்தோம். மணல் இறுகி இருந்ததால் இயல்பாக நடக்க முடிந்தது. கபடி விளையாடும் இளைஞர்கள், ஸ்டன்ட் செய்யும் சிறுவர்கள் என கேண்டிட் போட்டோகிராஃபி எடுப்பதற்குரிய காட்சிகள் நிறைய இருந்தன. லைட் ஹவுஸ் பகுதியை தாண்டி சென்ற போது ஸ்கிரிப்ட் பேப்பர்களோடு இயக்குனர், உதவி இயக்குனர்களும், ட்ரைபேட், கேமிராவுடன் கேமரா மேனும் லொக்கேஷன் தேடிக் கொண்டிருந்தனர். திரும்பி வரும்போது சிறுவயது பையன்களை ஒவ்வொருவராக சிலம்பம் சுற்ற வைத்து டெலி லென்ஸ் வைத்து மிரர்லஸ் கேமராவில் பதிவு செய்துகொண்டிருந்தார்கள். விசாரித்ததில் பள்ளி விளம்பரம் என்றனர்.
லைட் ஹவுஸ் கடந்த பிறகு மீன்பிடி படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடம் வந்தது. ஏராளமான படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கரைக்கு வரும் படகுகளை ட்ரேக்டர் வண்டியில் கட்டி இழுத்துக்கொண்டிருந்தனர். இந்த பகுதிக்கு பின்புறமாக சாலை ஓரங்களில் வரிசையாக மீன்கள் விற்றுக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு எதிர்ப்புறம் இருந்த பெரிய பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் வண்ண ஓவியங்கள் ஜொலித்துக் கொண்டிருந்தன.
அடுத்ததாக சிறிது தூரத்திற்கு மக்கள் வந்து செல்லும் இடமாக இருக்கிறது. ஆனால் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. இதற்கு அடுத்து ஒன்றிரண்டு படகுகள் நின்றுகொண்டிருந்தன. கிட்டத்தட்ட கடற்கரையின் எல்லையை நெருங்கியிருந்தோம். அருகிலேயே குடியிருப்பு பகுதி இருந்தது. அங்கு வசிக்கும் மக்களுக்கு கடற்கரை தான் இரவில் உறங்குவதற்கான இடம். சிலர் அப்போது தான் எழுந்து பாய்,போர்வை போன்றவற்றை எடுத்துக்கொண்டு சென்றனர். இன்னும் சிலர் குப்புற திரும்பி படுத்துக்கொண்டு இருந்தனர். இரண்டு துப்புறவு பணியாளர்கள் குப்பைகளை கூட்டிக்கொண்டு இருந்தனர். அந்த குடியிருப்பு பகுதியை கடக்கும்போது கடற்கரையும் முடிவுக்கு வருகிறது. இந்த இடத்தில் அடையாறு ஆறு வங்க கடலில் வந்து சங்கமிங்கும் கழிமுகம் பகுதி. அடையாற்றில் போதிய நீர் வரத்து இல்லாததால் கடலின் மிக அருகில் தன்னை சிறியதாக சுருக்கிக் கொண்டு முடிவடைகிறது அடையாறு.
மெரினாவின் எல்லை எதுவென சரியாக தெரியவில்லை. மெரினாவின் மொத்த நீளம் 13 கி.மீ, உலாவும் சாலை 6 கி.மீ என விக்கிபீடியா சொல்கிறது. கூவம் ஆறு கடலில் சேரும் இடத்தில் துவங்கி அடையாறு கழிமுகம் வரை பயணம் செய்த தூரம் 6 கி.மீ. இது தான் விக்கி குறிப்பிட்ட உலாவும் இடம் என நினைக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் வங்க கடலின் எல்லைகளில் இன்னும் அதிகம் பயணம் செய்து பார்க்க வேண்டும். எப்படியோ ஒரு ஆர்வத்தில் 6 கி.மீ நடந்து வந்துவிட்டோம். திரும்பி வரும்போது இதோ வந்தாச்சு என கூறிக்கொண்டே ஒருவழியாக திருக்வல்லிக்கேணி ரயில் நிலையத்தை அடைந்தோம். இன்று பெரிதும் எதிர்பார்த்திருந்த இன்னொரு விசயம், சூரிய உதயம்.இதற்கு முன்பு கன்னியாகுமரி சென்ற போது சூரிய உதயம் காண காத்துக்கொண்டிருந்த போது மேக மூட்டம் காரணமாக காண முடியவில்லை. இன்றும் அதே தான் தான் நடந்தது. 15 கி.மீ நடத்தும் சூரிய தரிசனம் கிடைக்கவில்லை.
வியக்க வைக்கும் மெரினாவில் கவலைப்பட வைக்கும் இன்னொன்றும் உள்ளது. சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் இடம் தவிர மற்ற பகுதிகளை அங்குள்ளவர்கள் கடற்கரையை கழிப்பிட பகுதியாக மாற்றி வைத்துள்ளனர். கரையின் மேல் பகுதியில் மட்டுமல்லாது அலைகள் வந்து போகும் இடத்திலும் காலைக்கடன் கழித்துக்கொண்டிருந்தார்கள். அலைகள் அவற்றை சுத்தும் செய்துகொண்டிருந்தன. கடற்கரையின் வடக்கு பகுதி முதல் தென் பகுதி வரை இதே நிலை தான். எவ்வளவு தூரம் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் இந்த கழிப்பிட வசதிக்கு இன்னும் அதிகம் மெனக்கெட வேண்டும் என்பதை அங்காங்கே தென்படும் காட்சிகள் அறிவுறுத்திக்கொண்டே உள்ளன.
Friday, September 1, 2023
கட்டப்பட்ட கைகள் - ராதா மனோகரன்
ஒரு 3௦ ஆண்டுகளுக்கு முன்னால்
ஆசிரியர் என்ற சொல்லுக்கு, அந்தப் பதவிக்கு,
அந்த மனிதருக்கு அவ்வளவு மரியாதை இருக்கும்.
ஊருக்குள் வாத்தியார் என்றால் தனி அந்தஸ்து. பெரும்பாலும் சைக்கிளில் தான்
வருவார்கள். அவர்களை எங்கு பார்த்தாலும் வலது கை விரிந்துகொண்டு நெற்றியின்
ஓரத்துக்கு சென்று விடும். உதடுகள் "குட் மானிங் சார் /டீச்சர் என்று ராகம்
பாடும். இன்றைக்கும் சில ஆசிரியர்களை
நினைக்கும் பொழுது நன்றி உணர்வு தானாக வரும்.
நான் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது
ராமசாமி வாத்தியார் என்பவர் எனது ஆங்கில ஆசிரியர்.வெள்ளை சட்டை, மடித்துக் கட்டிய வெள்ளை வேட்டி, கையில் ஒரு 3 அடி நீளக்குச்சி இவரது தோற்றம் கோபம் ,மகிழ்ச்சி
எதையும் பிரித்துப் பார்க்க முடியாத உணர்ச்சி.அவர் நடையிலும்,பாடம் எடுக்கும் பாங்கிலும், மாணவர்களை அணுகும் பாணியிலும் ஒரு நேர்த்தி
இருக்கும் முகத்தில் ஒரு தீர்க்கம் இருக்கும். இவர் மீது மாணவர்கள் அனைவருக்கும் மரியாதை கலந்த பயம்
இருக்கும்.
இவரின் அணுகுமுறை love
and law ....
வகுப்பில் ஒரு மாணவன் தூங்கிக் கொண்டிருந்தால் அட்டெண்டரை அழைத்து சொந்த
காசில் டீ வாங்கி வரச் சொல்லி, மெதுவாக
அவன் அருகில் சென்று மென்மையாக
எழுப்பி" தம்பி போய் முகம் கழுவி விட்டு இந்த டீயை வெளியில் அமர்ந்து
குடித்து விட்டு வகுப்புக்கு வா "
என்பார்.ஒரு நாளும் திட்ட மாட்டார். அதிலுள்ள சூட்சமமே ஒரு முறை டீ குடித்தவன்
அடுத்த முறை மிக மிக கவனமுடன் அவரது வகுப்பில் இருப்பான் என்பதே. அதே ஆசிரியர் வீட்டுப் பாடம் செய்ய வில்லை
என்றால் உள்ளங்கையைத் திருப்பி நடு விரலை வளைத்து மணிக்கட்டில் முட்ட வைப்பார். பார்ப்பவர்கள் விரல் ஒடிந்து கையோடு
வந்துவிடும் என நினைக்கும் அளவுக்கு அந்த மாணவன் அஷ்ட கோணலாக நெளிவதும்
கெஞ்சுவதும் என குரங்காட்டம் நடத்திக்
கொண்டிருப்பான். அதை சர்வ சாதாரணமாக நடத்துவார். அவரை விட்டு நகர்ந்து வந்து கையை
உதறி உதறி விரல் இன்னும் தொடுத்துக் கொண்டுதான் இருக்கிறதா என்று உறுதிப்
படுத்திக் கொள்ள வேண்டும். (அதன் பின்னர் நாம் எவ்வளவு முயற்சித்தாலும் அந்த விரல்
நுனி மணிக்கட்டைத் தொடாது) அன்றிலிருந்து
முதல் வீட்டுப் பாடமாக ஆங்கில புத்தகம் பையிலிருந்து தெரித்துக் கொண்டு
வெளியே வரும்.
அந்தக் கையில் இருக்கும் தடி ஒழுக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தப் படும்.
ஒழுக்கம் தவறினால் மண்டியிட்டு கைகள்
இரண்டையும் பின்னால் முறுக்கி தடியால் உள்ளங்கால்களில் வெளுத்து வாங்குவார்.
கனிவும் கண்டிப்பும் நிறைந்த ஆசிரியர்.
அவர் அடிப்பார் என்று பயந்து தன்னை சரிப்படுத்திக் கொண்ட மாணவர்கள் உண்டே தவிர
அடித்தார் என்று வெறுத்தவர்கள் எனக்குத் தெரிந்து எவருமில்லை. அதை இரண்டு
தருணங்களில் உணர்ந்தேன். ஒருமுறை அவர் நாய்க்கடி பட்டு மிகவும் சிரமப்பட்டு
விடுப்பில் இருந்த பொழுது மதிய உணவு இடைவேளையில் (மாணவர்கள்) கூட்டம் கூட்டமாக
அவரது வீட்டிற்கு ஓடிச் சென்று பார்த்து வருவோம்.
அவர் இறந்த செய்தியைக் கேட்டு திரண்ட மாணவர்களும் சிந்திய கண்ணீரும் சொல்லும்
அவர் மாணவர்கள் மத்தியில் பிடித்த இடத்தை.
ஒரு முறை கூட கண்டிக்கப் பட்டவனின் பெற்றோர் பள்ளியில் வந்து கேள்வி கேட்ட
ஞாபகம் எனக்கு இல்லை. கண்டிக்கப்பட்டவன் வீட்டில் சென்று சொல்ல மாட்டான் சொன்னால் அங்கும்
கண்ணமோ காதோ பழுத்துவிடும். பள்ளிகளில் ஆசிரியர்களிடம் கூறப்பட்டதே கண் காதுகளை
விட்டு விட்டு அடி வெளுத்தெடுங்கள் என்பது தானே. ஒழுக்கமும், கட்டுப்பாடும் கற்றுத் தரப்பட்டது பள்ளிகளில் தானே...பாடம்
கற்றுத்தரும் ஆசிரியருக்கு கண்டிக்கும் உரிமை ஏன் இல்லை?. அடித்துதான் திருத்த
வேண்டும் என்று சொல்லவில்லை. கல்வி – கற்றல் அடித்துத் திணிக்கப் பட முடியாதது.
அது மாணவனின் கற்றல் திறன், திறமை, ஆர்வம், கற்றல் சூழல் போன்ற பல காரணிகளை
சார்ந்தது. அதை அணுகும் முறை அடித்தல் அல்ல. அனால் ஒழுக்கம் முழுக்க முழுக்க சிறு
வயது முதல் உருவாக்கப் படுவதே. சிறு சிறு தவறுகள் செய்யும் பொழுது ஏன் கண்டிக்கக்
கூடாது? . தவறுகள் எல்லை மீறும் போது ஏன் அடிக்கக் கூடாது? நான் தவறு செய்தாலும் கண்டிப்பதற்கு
சட்டமும் என் பெற்றோரும் இடம் கொடுக்க மாட்டார்கள் என்பதை மாணவர்கள் நன்கு
புரிந்து கொண்டுள்ளார்கள். ஆசிரியரை மாணவனும் பெற்றோரும் மதித்து அவரைப் பார்த்து
மாணவர்கள்பயந்த நிலை தலை கீழாக மாறி உள்ளது.
என்று ஆசிரியரின் கையும் வாயும் கட்டப்பட்டதோ அன்றே ஒழுக்கம் என்ற முரட்டுக்காளை மூக் கனாங்கயிறை அவிழ்த்துக் கொண்டது. குட்டி யானைக்கு மதம் பிடித்துக் கொண்டது. சட்டம் ஒரு புறம் .....பெற்றோரின் உறுமல் மறுபுறம்...... சிறிய சிறிய தவறுகளைக் கூட கண்டிக்கும் சுதந்திரமும் தைரியமும் தெய்வத்திற்கு முன்னால் வைக்கப் பட்ட குருவிற்கே இல்லை என்றால் அடுத்து வரும் தெய்வம் வாயடைத்துதானே போகவேண்டும்....
ஆசிரியர்களின் கைகள் கட்டப் பட்டது
மட்டுமே மாணவர்களின் ஒழுக்கச் சீர்கேடுகளுக்கு காரணமா?
அடுத்த இதழில் தொடரும்.........
மனமே.... நலமா! - சுகன்யா
இன்றைய கால சூழலில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பரவலாகச் சொல்வது 'I feel depressed' (நான் மனச்சோர்வாக உணர்கிறேன்) என்பது கொரோனா காலத்திற்குப் பின் இதனைச் சொல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவே உணர முடிகின்றது. இதற்கான காரணம் என்னவாக இருப்பினும், எப்படி கையாள்வது, என்ன செய்ய வேண்டும் குறிப்பாக என்ன செய்தல் கூடாது எனும் புரிதல் முக்கியத் தேவையாக உள்ளது.
Tension – படபடப்பு ; Anxiety - பதட்டம் ; Stress – மனஅழுத்தம்; Conflict – மனக்குழப்பம்; Depression - மனச்சோர்வு
Reference
https://www.who.int/news-room/fact-sheets/detail/depression
https://apps.who.int/iris/bitstream/handle/10665/254610/WHO-MSD-MER-2017.2-eng.pdf
https://ncrb.gov.in/sites/default/files/ADSI-2021/adsi2021_Chapter-1A-Traffic-Accidents.pdf
https://www.macrotrends.net/countries/IND/india/suicide-rate
https://www.worldometers.info/coronavirus/country/india/
கறுப்பு நிறத்தில் ஒரு பூனை - யசோதா பழனிச்சாமி
கொ டைக்கானல் செல்லும் பாதையில் பொலினோ கார் விரைந்து சென்று கொண்டிருந்தது. காரினுள் ‘வழிநெடுக காட்டுமல்லி யாரும் அதைப்பார்க்கலையே’ பாடல் இச...