Monday, September 4, 2023

என்னை பைத்தியம் என்கிறாய் - கே. ஜெயலலிதா

 


காரணங்களும் இல்லை.
காரியங்களும் இல்லை.
எதிர்ப்பும் இல்லை.
எதிர்பார்ப்பும் இல்லை..
என்றெல்லாம்
ஏதேதோ சொல்லிக் கொள்கிறேன்.
ஆனாலும் எந்நேரமும் ஒரு உரையாடல்
மனதிற்குள் உன்னுடனே
நடந்து கொண்டியிருக்கிறது.
வலியென்றால் வந்து
உன் கரம் பற்றி இறுக்கிக் கொள்கிறேன்.
விழி துளிர்க்கும் போதெல்லாம்
உன் மடி தேடிக் கொள்கிறேன்.
தேவையெனில் – உன்
கால் கட்டி இறைஞ்சுகிறேன்.
சில நேரம் கெஞ்சுகிறேன்.
சில நேரம் கொஞ்சுகிறேன்.
சில நேரம் பொங்குகிறேன்.
சில நேரம் உளறுகிறேன்.
முடியாத கட்டங்களில்
உன் நெஞ்சோடு இறுக்கி
உறங்க வைக்கவும் ஆணையிடுகிறேன்.
குறுக்கீடில்லாமல்
கொட்ட அனுமதிக்கும்
உன்னை நான் கடவுள் என்கிறேன்
நீயோ என்னை பைத்தியம் என்கிறாய்...!?


No comments:

Post a Comment

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...