Sunday, November 12, 2023

பெருவெடிப்புகளில் பெருவரம் - மைதிலி

 






எல்லாம் சரிதான்

ஆனால் கழுவில் ஏற்றிய பிறகு 
காலம் பதில் சொன்னால் என்ன?
சொல்லாவிட்டால் தான் என்ன?

மனம் பட்ட பாடை 
திருப்புதல் செய்ய 
இயலுமா என்ன?

கசக்கிப் பிழிந்து விட்டு
காலம் பதில் சொல்லிவிட்டால்
கசங்கியது நேர்கோடாகிடுமா?

இருப்பினும்
மன தைரியத்துடன்
தனித்தியங்கிடும் 
இன்பம் அலாதி தான்.

மனிதம் அறிய முடிகிறது !
மனம் புரிய முடிகிறது!

பாதைகளின் நோக்கம் புரிகிறது !
பயணங்களின் திசையும் புரிகிறது !

கொள்கைகளை இறுகப் பற்றிட முனைகிறது !
கோட்பாடுகளை மேலும் வேரூன்றிட முனைகிறது !

இதை கடந்து பயணித்திட 
புதிய பாதைகளை உருவாக்கிட 
எத்தனிக்க இயலுகிறது! 
இதை தவிர்த்து ஆக்கப் பூர்வமாய்
செயலாற்றிட ஆற்றலை  
சேமிக்க இயலுகிறது !

நம்பிக்கை விருட்சமாகிட-
அதன் நிழலில் அயர்ந்து 
உறங்கிட முடிகிறது ! 

இதுவே சோதனைகளின் பெருவெடிப்பு !
இதில் மகிழ்ந்திருக்கிறேன் என்பது பெருவரம் !!

பெருவெடிப்புகளில் பெருவரம் 
பெற்று உயிர்த்திருப்பவள். 
என் பிறப்பின் நோக்கங்களை
உணர்ந்திருப்பவள்.


1 comment:

  1. நம்பிக்கை தரும் படைப்பு

    ReplyDelete

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...