Monday, January 1, 2024

என் அமெரிக்க பயணம் - பகுதி 2 - சக்திவேல் விரு

 


                


ரி வந்தது தான் வந்தாச்சு இந்த அமெரிக்க குடியுரிமை கும்பல் என்னதான் நம்மை வெச்சு செய்ய போகிறார்கள் என ஆவலுடன் அங்குள்ள அறைக்குள் சென்ற பொழுது தான் தெரிந்தது அங்கிருக்கும் விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்களில் பாதிபேர் நம் இந்திய மக்கள் தான். அவர்களை பார்த்த உடனே ஒரு தெம்பு வந்துவிட்டது போல ஒரு உணர்வு . 

கண்ணாடி கூண்டுக்குள் ஆறு பேர் கொண்ட விசாரணை குழுவினர் பல்வேறு  விசாகளில்  வந்தவர்கள் ஒவ்வொருவரையும் தோண்டி துருவிகொண்டு இருந்தார்கள். பலர் அவர்கள் கையில் இருந்த காகிதங்களை கண்ணாடி கூண்டுக்குள் சொருகுவது தாங்கள் வந்த நோக்கம் வேலை என்று பலவற்றை விளக்குவதுமாக போய்க்கொண்டு இருந்தது. 

ஒரு முக்கால் மணிநேரம் கழிந்த பின்னர் ஒரு குடியுரிமை அலுவலர் என் தந்தை பேரை துளசிமணி ( எப்பவும் வெளிநாடுகளில் நமது இனிசியள் பேரை தான் கூப்பிடுவார்கள் ) என  சொல்லி அழைக்க நமக்கு இனிதான் ஏழரையே  தொடங்க போகுது என்று  மனதில் எண்ணிக்கொண்டே அவரிடம் சென்றேன் .  

"சரி சொல்லுங்க எதுக்கு வந்தீங்க ? " என்றார்.

"ஒரு அலுவல் வேலை இருக்கு முடிச்சுட்டு அப்படியே அமெரிக்க நாட்டை சுத்தி பார்க்க வந்தேன் ! " என்றேன்.

"தாராளமா செய்யுங்க . சரி அதற்கான ஆவணங்கள் எங்கே ? " என்றார் .

"இதோ இந்த போனுக்குள்ள மாட்டிக்கிச்சு போனும் பேட்டரி இல்லாம செத்துடுச்சு.. ஒரு சார்ஜிங் வசதி மட்டும் செஞ்சு கொடுத்தா எல்லா உண்மையையும் அது கக்கி என்னை காப்பாத்திவிடும் " என இழுத்தேன் .

பக்கத்தில் இருக்கும் மற்றுமொரு பெண் அலுவலரிடம் பேசி ஒரு கருப்பு சார்ஜிங் பாட்டரி ஒன்றை கொடுத்தார் . அதில் போனை மாட்டியவுடன் ஐந்து நிமிடம் கழித்து உயிர்பெற்று எனது  கைபேசி என் அமெரிக்க பயண கனவை உயிர்ப்பித்தது என்றே சொல்லலாம்.

முதலில் அவர் கேட்டது  நான் லண்டன் திரும்பி செல்வதற்கான விமான டிக்கெட் , என் அலுவலக ஈமெயில் , தங்குமிட புக்கிங் ஈமெயில் , வார இறுதி நாட்களில் ஊர் சுத்தி  பார்ப்பேன் என்று நானே தேவையில்லாமல் வாயை விட்டதால் என் அக்கவுண்டில் உள்ள தொகையை இங்கிலாந்து பேங்க் அக்கவுண்ட்  ஆப்பை திறந்து காட்ட அவருக்கு சந்தேகம் தீர்ந்தது போல எனக்கு தோன்றியது . 

"சரி கிளம்புங்க. ஒழுங்கா வேலையை முடித்த பின்னர் நல்லா சுத்தி பார்த்துவிட்டு சொன்ன தேதியில் ஊர் திரும்புங்கள்" என்றார் அலுவலர். 

"சரிங்க உத்தரவு வாங்கிக்கிறேனுங்க ! " என சொல்லாத குறையாக முடித்துக்கொண்டு வெளியில் நீண்ட நேரம் என்னை பிக்கப் செய்ய காத்திருந்த நண்பனை செல்பேசினேன் .

"எனக்கு தெரியும்டா முன்னரே உனக்கு விசா மறுப்பு ஆன வரலாறு இருப்பதால் (20 ஆண்டுகளுக்கு முன்பு F1 மாணவர் விசா மறுப்பு ) குடியுரிமை கும்பல் விசாரணை இருக்கலாம்  என ஒரு சந்தேகம் இருந்தது அதனால் தான் முடியட்டும் என கால் பண்ணவில்லை " என்றான்.

"அதை பற்றியெல்லாம் ஒன்னும் கேட்கவில்லை , என் கைபேசியில் எல்லா விபரங்களையும் வைத்து அதில் பாட்டரி இல்லாமல் போனது  தான் பிரச்சனை "  என்றேன்  

நல்ல நாடு நல்ல நண்பன் . 

"அப்படி என்னதாண்டா இந்த நாட்டுல வெச்சுருக்காங்க இந்தனை பேரு நம்மாட்கள் வந்திருக்கிறார்கள். குடியுரிமை அலுவல் ஆட்கள் அவர்களை வெச்சு லெப்ட் ரைட் என விசாரணை செய்துகொண்டும்  இருக்கிறார்கள்?" என்றேன் .
 
"உள்ளே வந்துட்டீல ரெண்டுநாள் போனால் நீயே புரிஞ்சுகுவே" என்றான் நண்பன் .

...பயணம் தொடரும்...

No comments:

Post a Comment

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...